(லியோன்)
கிழக்குமாகாண பிரதி நீர்ப்பாசன மட்டக்களப்பு பிராந்தியத்தில் கடமையாற்றி ஒய்வு பெற்று செல்லும் கிழக்குமாகாண
பிரதி நீர்ப்பாசன மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளர் முருகுப்பிள்ளை வடிவேல் சேவையினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன நலன்புரிச்
சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் எந்திரி ஜி .செந்தூரன் தலைமையில் பிரதி நீர்ப்பாசன
பணிப்பாளர் பணிமனை மட்டக்களப்பு பிராந்திய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
.
1993 .ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி திருகோணமலையில்
நீர்ப்பாசன பொறியியளாராக கடமைகளை பொறுப்பேற்று
மட்டக்களப்பு ,அம்பாறை ,திருகோணமலை ஆகிய பிராந்தியங்களில் நீர்ப்பாசன பொறியியளாராக சேவையாற்றி 2010 ஆம்
ஆண்டு திருகோணமலை பிரதி நீர்ப்பாசன பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று 2012 அம ஆண்டு
முதல் 2018 ..04.08 ஆம் திகதி வரை கிழக்குமாகாண பிரதி நீர்ப்பாசன மட்டக்களப்பு பிராந்திய
பணிப்பாளராக கடமையாற்றி ஒய்வு பெற்று செல்லும் முருகுப்பிள்ளை வடிவேல் சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு
பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர்
எந்திரி எஸ் . திலகராஜா , பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர்களான எந்திரி வி பி பி .
தனராஜ சிங்கி , எந்திரி எஸ் .கணேசலிங்கம் , கிழக்குமாகாண பிராந்திய பிரதி
நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி பி .ராஜகோபால சிங்கம் .அம்பாறை
பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி யு எல் எ . நாசார் மற்றும் பிரதி
நீர்ப்பாசன பணிப்பாளர் பணிமனை மட்டக்களப்பு பிராந்திய உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள்
கலந்துகொண்டனர்