வெற்றி வாகை சூடியது மகிழடித்தீவு மகிழைஇளைஞர் விளையாட்டுக் கழகம்



(S.t)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுக் கழகம் கிராமத்தை  உருவாக்கி உயிர் நீர்த்த உறவுகளின் ஞாபகார்த்தமாக மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை 21ம்,22ம்,23ம் திகதிகளில் நடாத்தி இருந்தார்கள்.

இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில்
01ம் இடத்தினை மகிழடித்தீவு    மகிளை இளைஞர் விளையாட்டுக் கழகமும்,


02ம் இடத்தினை அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும்,


03ம் இடத்தினை காஞ்சிரங்குடா நாகஒளி விளையாட்டுக் கழகமும்,


04ம் இடத்தினை நடராஜானந்தபுரம் சக்தி விநாயகர் விளையாட்டு கழகமும் பெற்றுக் கொன்டன.


சிறத வீரராக அரசடித்தீவு விக்னேஸ்வரா வீரர் கஜமுகன் தெரிவு செய்யப்பட்டார்.


சிறந்த கோள் காப்பாளராக மகிழடித்தீவு மகிளைஇளைஞர் அணியின் கோள் காப்பார் தெரிவு செய்யப்பட்டார்.


இன்று நடைபெற்ற இறுதி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும்,
சிறப்பு அதிதியாக மண்முனை மேற்கு  பிரதேச சபை உறுப்பினர் திரு. மேகன் அவர்களும் கலந்து கொன்டனர்