மட்டக்களப்பு
மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு உப்போடை புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி மட்டக்களப்பு
மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஆலய பங்கு தந்தை
லோரன்ஸ் , அருட்தந்தை போல்சற்குண நாயகம் ,
அருட்தந்தை நவாஜி, அருட்தந்தை ரோசன் ,அருட்தந்தை ஜோர்ச் ஜீவராஜ் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர்
.
ஆலய
வருடாந்த திருவிழா கடந்த 13.04.2018 வெள்ளிக்கிழமை
மாலை பங்கு தந்தை தலைமையில் கொடியேற்றபட்டு திருவிழா ஆரம்பமானது. தொடர்ந்து நவநாட்காலங்களில் தினமும்
மாலை திருசெபமாலை அருளுரைகளுடன் திருப்பலியும் இடம்பெற்றது.
(21) சனிக்கிழமை மாலை புனிதரின்
திருச்சுருப பவனி இடம்பெற்றதுடன் தொடர்ந்து ஆலயத்தில் விசேட திவ்வியநற்கருணை வழிபாடுகளும், மறைவுரைகளும் இடம்பெறவுள்ளதுடன் விசேட
திருப்பலி ஒப்புகொடுக்கப்பது .
(22) ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு இடம்பெற்ற திருவிழா
திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையினால்
பங்கு மாணவர்களுக்கு புதுநன்மை, உறுதிப்பூசுதல்
ஆகிய அருள் அடையாளங்கள் வழங்கப்பட்டு
தொடர்ந்து திருவிழா விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .
திருப்பலியின் பின் ஆலய
கொடியிறக்கப்பட்டு வருடாந்த ஆலய திருவிழா
இனிதாக நிறைவு பெற்றது . இந்த திருவிழா
திருப்பலியில் பெருமளவான இப்பகுதி மக்கள் கலந்து சிறப்பித்தனர் .