(லியோன்)
தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலை
உத்தியோகத்தர்களினால் மாபெரும் சிரமதான
பணி இன்று மட்டக்களப்பு சத்துருகொண்டான்
ஒசானம் நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது
.
மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளினால் சமூகத்தின் மத்தியில்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் .
இதன் கீழ் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு சிறைச்சாலை
அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு
சத்துருகொண்டான் விசேட தேவையுடைய மாணவர்களின்
ஒசானம் நிலைய வளாகத்தினை துப்பரவு செய்யும் சிரமதான பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டது .
இதனுடன் இணைந்ததாக விசேட தேவையுடைய மாணவர்களுக்கான உலர்வுணவு
பொருட்களும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால்
வழங்கி வைக்கப்பட்டது .
இன்று முன்னெடுக்கப்பட்ட சிரமதான பணியில் சிறைச்சாலை
அத்தியட்சகர் மற்றும் பிரதம ஜெயிலர் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்
கலந்துகொண்டனர்