(லியோன்)
சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளின் சமுர்த்தி சௌபாக்கியா சந்தைப்படுத்தல் கண்காட்சியும் விற்பனையும்
மட்டக்களப்பில் நடைபெற்றது
சமுர்த்தி தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தல், தொழில்
முயற்சிகளுக்கான ஊக்குவிப்பு ,வெற்றிகரமான
வர்த்தக சமூகம் ஒன்றினை உருவாகுதல், சந்தைப்படுத்தல் திறமை , தொழில்
முயற்சியாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்தல் மற்றும் புதிய சந்தை வாய்ப்புக்களை இனங்காண்பது தொடர்பாக சமுர்த்தி திணைக்களத்தினால்
நாடளாவிய ரீதியில் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தம் சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டங்களை நடைமுறைப்
படுத்தப்பட்டு வருகின்றன .
இதன்கீழ் தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வை
முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள சமுர்த்தி
பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் சமுர்த்தி சௌபாக்கியா கண்காட்சியும்
விற்பனையும் கல்லடி பால சந்தையில் நடைபெற்றது .
பிரதேச செயலாளர் கே
.குணநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,
சமுர்த்தி வலய
வங்கி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி
உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி பயனாளிகள் என பலர்
கலந்துகொண்டனர்