தேற்றாத்தீவு பிரதான வீதியில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்து.


புதன்கிழமை காலையில் (11..04.2018) மட்டக்களப்பு கல்முனை வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து சற்றுத்தூரத்தில் கல்முனை பகுதி
நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியை விட்டு விலகி நீர்வடிந்தோடும் வடிகான் பள்ளத்தில் விழுந்தமையினால் சாரதி தூக்கிவீசப்பட்டு முச்சக்கரவண்டியும் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணிகள் யாரும் இருக்கவில்லை.

குறித்த முச்சக்கரவண்டி சாரதியின் கவலையீனம் அல்லது அதிகரித்த வேகம் கட்டுப்பாட்டை மீறியதானாலே இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும்.