2018 ஆண்டுக்கான நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் பொது கூட்டம்


(லியோன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கம் 2018 ஆண்டுக்கான நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் பொது கூட்டம்  மண்முனை வடக்கு சமுர்த்தி மகா சங்க முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கே .நிர்மளா தலைமையில் இன்று பிற்பகல்   பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது .


மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் நான்கு வலயங்களில் உள்ள சமுர்த்தி பயனாளிகளின்  நலன் கருதி மகாசங்கத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டு அதன் ஊடாக அபிவிருத்தி திட்டங்கள் ,முன்னேற்றகரமான சேமிப்புக்கள் ,பொதுசேவைகள்  போன்ற  செயல்திட்டங்களை முன்னெடுப்பதற்காக  மண்முனை வடக்கு சமுர்த்தி மகா சங்கத்தின் கட்டுப்பாட்டு சபையில்   இருந்து 7  நிறைவேற்றுக்குழு  உறுப்பினர்கள் தெரிவு செய்யும் பொது கூட்டமாக இன்று நடைபெற்றது .

நான்கு வலயங்களான கல்லடி வலயத்தில் இரண்டு உறுப்பினர்களும் , புளியந்தீவு வலயத்தில் இரண்டு உறுப்பினர்களும் , இருதயபுரம்  வலயத்தில் இரண்டு உறுப்பினர்களும், இருதயபுரம் கிழக்கு வலயத்தில் ஒரு உறுப்பினருமாக  7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .

உறுப்பினர்கள் தெரிவு செய்யும் பொது கூட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கம் கருத்திட்ட முகாமையாளர் , சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள் , சமுர்த்தி வங்கி உதவியாளர்கள் , மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்க கட்டுப்பாட்டு சபை  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்