(லியோன்)
மட்டக்களப்பு அருணோதய வித்தியாலயத்தின் வகுப்பறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு
மாணவர்களின் சேமிக்கப்பட்ட பண உண்டியல்கள்
திருடப்பட்டுள்ளதாக பொலிசார்
தெரிவிக்கின்றனர் .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு அருணோதய
வித்தியாலயத்தின் வகுப்பறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு மாணவர்களினால்
வங்கியில் வைப்பிலிடுவதற்காக சேமித்து உண்டியல்களில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபரினால்
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்
தெரிவிக்கின்றனர் .
இன்று காலை பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர்களும் ,மாணவர்களும் வகுப்பறைக்கு சென்ற
போது வகுப்பறைகளின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் வகுப்பறையில் உள்ள அலுமாரிகள் உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிடுந்த
உண்டியல்கள் திருடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி .சுபாஷினி ரவிதேவன்
தெரிவித்தார் .
திருடப்பட்ட உண்டியல்கள் மாணவர்களின் வங்கி கணக்கில் வைப்பில்டுவதற்கு சேமிப்புக்காக
வங்கியினால் வழங்கப்பட்டு மாணவர்களினால் சேமிக்கப்பட்ட பணம் இருந்தாகவும் , இன்று
அதிகாலை வேளையிலே இனம் தெரியாத நபர்களினால்
வகுப்பறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக அதிபர்
தெரிவித்தார் .
குறித்த விடயம் தொடர்பாக பெற்றோர்கள்
தெரிவிக்கையில் பாடசாலையில் தரம் ஒன்று
முதல் தரம் ஐந்து வரையில் சுமார் 375 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையாகும் , கடந்த
காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள்
இடம்பெற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள்
செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இவ்வாறான சம்பவம் இன்று
இடம்பெற்றுள்ளது . இந்த பாடசாலைக்கு பாதுகாப்பற்ற சுற்றுமதில்கள் , பாடசாலைக்கான காவலாளி இல்லாத காரணத்தினாலும் இவ்வாறான
சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவித்தனர்
குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசாரினால் விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்