தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் உள்ளுராட்சிமன்றம் தொடர்பில் அறிந்திருக்கவேண்டிய விடயங்கள் தொடர்பிலான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கே இந்த செயலமர்வு நடாத்தப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் க.யோகவேள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளுராட்சிமன்ற சட்டங்கள் தொடர்பிலும் உள்ளுராட்சிமன்ற செயற்பாடுகள்,அதன் தன்மைகள்,அதனால் மக்களுக்கு ஆற்றக்கூடிய சேவைகள் தொடர்பில் விரிவான விரிவுரைகள் வளவாளர் அன்பழகன் குரூசினால் வழங்கப்பட்டனர்.

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சிசபைகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள்,கட்சி முக்கிஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.