(லியோன்)
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில்
நிர்மாணிக்கப்படுகின்ற சிற்பதேருக்கான பவளக்கால் பொருத்தும் நிகழ்வு நடைபெற்றது
.
இலங்கையின் வரலாற்று
சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற 39.3 அடி
உயரமான சிற்பதேருக்கான பவளக்கால்
பொருத்தும் நிகழ்வு இன்று காலை சுபவேளையில் சிறப்பு பூஜை
வழிபாடுகளுடன் நடைபெற்றது .
யாழ்பாணம் ஸ்ரீ காளிகா சிற்பகலை ஸ்தபதி ரதகளா சூரி செல்லையா
பாலச்சந்திராவினால் நிர்மாணிக்கப்படுகின்ற சிற்பதேருக்கு பவளக்கால் பொருத்தும்
நிகழ்வு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சௌந்தராஜன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது .
இந்த நிகழ்வில் ஆலய வண்ணக்கர்மார்கள் , ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் ,பக்த அடியார்கள் என பலர் கலந்துகொண்டனர்.