திருப்பெருந்துறை கொத்துக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய மாசி மகத்தீர்த்தம்


(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில்  வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு  திருப்பெருந்துறை கொத்துக்குளம்  ஸ்ரீ  முத்து மாரியம்மன் ஆலய மாசி மகத்தீர்த்தம் அடியார்கள் புடை சூழ  இன்று கோலாகலமாக நடைபெற்றது
.

ஆலய பிரதம  குரு சிவஸ்ரீ  நாராயண சன்முகநாதக் குருக்கள் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி  விசேட யாக பூசைகளுடன், ஹோமம் பூசைகள்  நடைபெற்று ,தொடர்ந்து விசேட  அபிசேகம் பூஜைகளுடன்  பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
  .
அபிசேக பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று ஆலய மாசி மகத்தீர்த்தம்  அடியார்கள் புடை சூழ வேத ,நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன்  கோலாகலமாக  ஆலய முன்றலில் உள்ள தீர்த்தக்கேணியில் நடைபெற்றது .

நடைபெற்ற  ஆலய மாசி மகத்தீர்த்தம்  உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்


















.