(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று
சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு திருப்பெருந்துறை கொத்துக்குளம் ஸ்ரீ
முத்து மாரியம்மன் ஆலய மாசி மகத்தீர்த்தம் அடியார்கள்
புடை சூழ இன்று கோலாகலமாக நடைபெற்றது
.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நாராயண சன்முகநாதக் குருக்கள் தலைமையில் விநாயர்
வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட யாக பூசைகளுடன், ஹோமம் பூசைகள் நடைபெற்று ,தொடர்ந்து விசேட அபிசேகம் பூஜைகளுடன் பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு
அபிசேகம் செய்யப்பட்டது.
.
அபிசேக பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று ஆலய மாசி மகத்தீர்த்தம் அடியார்கள் புடை சூழ வேத ,நாத, மேளங்களுடன்
அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் கோலாகலமாக
ஆலய முன்றலில் உள்ள தீர்த்தக்கேணியில்
நடைபெற்றது .
நடைபெற்ற ஆலய மாசி
மகத்தீர்த்தம் உற்சவத்தில்
பெருமளவான அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்