நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு விமான நிலையத்தினை திறந்துவைக்கும் நிகழ்வுக்கு வருகைதந்த அமைச்சரிடமே இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
விமானப்படை முகாம் அமைக்கப்பட்டபோது குறித்த பகுதியில் பொதுமக்களின் காணிகளும் வவுணதீவு பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதையான வலையிறவு - சுமைதாங்கியடி பிரதான வீதி என்பன உள்வாங்கப்பட்டதுடன் இதன் காரணமாக பொதுமக்கள் ஐந்து கிலோமீற்றர் வீதியை சுற்றியே வலையிறவு பாலம் ஊடாக வவுணதீவினை சென்றடையமுடியும்.
ஆனால் வலையிறவு - சுமைதாங்கியடி பிரதான வீதி மக்கள் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படுமானால் 500மீற்றர் மட்டுமே பயணிக்கவேண்டிய நிலையேற்படும் என்பதுடன் இலகுவாக தமது பிரதேசத்திலிருந்து வந்துசெல்லமுடியும்.
குறித்த வீதி உள்வாங்கப்பட்டுள்ளதன் காரணமாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயளர்களும் வியாபாரிகள்,மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் இதன்போது உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,குறித்த வீதி தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தனக்கு அனுப்பிவைத்தால் அது தொடர்பில் நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார்.
கடந்த காலத்தில் பல தடவைகள் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.