(லியோன்)
பால்நிலை அறிவூட்டல் பகுதி இன்று மட்டக்களப்பு பொது நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது
கிழக்கு பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவ அலகின்
யுனெஸ்கோ நிறுவன பங்குபற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பால்நிலை அறிவூட்டல்
பகுதிகள்
மட்டக்களப்பு பொது நூலகத்திலும் , கிழக்கு பல்கலைக்கழகத்திலும்
திறந்து வைக்கப்படவுள்ளது .
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக மட்டக்களப்பு பொது நூலகத்தின் உசாத்துணைப்
பிரிவில் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது .
இந்நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யுனெஸ்கோ உப நிகழ்ச்சி
திட்ட ஒருங்கிணைப்பாளர் த .ரமணன் ஒழுங்கமைப்பில் பால்நிலை அறிவூட்டல் பகுதி மட்டக்களப்பு பொது நூலகத்தின் உசாத்துணைப்
பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த. ஜெயசிங்கம் , துணை வேந்தர் வைத்திய கலாநிதி கே
.இ . கருணாகரன் , மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் , பிரதி ஆணையாளர்
என் .தனஞ்சயன் , யுனெஸ்கோ நிகழ்ச்சித் திட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர் திருமதி
பாரதி கெனடி ,உப திட்ட ஒருங்கிணைப்பாளர்களான கலாநிதி ஜி கெனடி ,கலாநிதி மதிவேந்தன் ,கலாநிதி த
,பிரபாகரன் , த. ரமணன் , கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகளான கலாநிதி திருமதி எம்
.வினோபாபா , திருமதி ,ரோஸானா ராகல் ,கிழக்கு பல்கலைக்கழக பதில் நூலகர் ஜெயராஜ்
மற்றும் மட்டக்களப்பு பொது நூலகர்கள் , பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர் .
பால்நிலை தகவல் பகுதி நூலகங்களில் ஸ்தாபித்தல் முக்கிய நோக்கம்
பால்நிலை அறிவூட்டலை மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் மேம்படுதலாகும் .
இத்தகைய பகுதிகள் பல்வேறுபட்ட தகவல் சாதனங்களை காட்சிப்படுத்துவதால்
நூலக பாவனையாருக்கு பால்நிலை தொடர்பான அறிவு வழங்குவதோடு ஆய்வாளர்களுக்கு தேவையான
தகவல் வளங்கள் அபிவிருத்தி செய்கின்ற பேண்தகு நிலையை உறுதிப்படுத்த நூலகம் அமைகின்றது . .