“ ஒரே நோக்குடனான கனவு ,அதற்கான திட்டமிடல் மூலம் உயரிய வாழ்க்கை “ தலைமைத்துவ பயிற்சி நெறி


(லியோன்)

சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய சத்திய சாயி நிறுவன அனுசரணையில் தலைமைத்துவம் தொடர்பான இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பில் நடைபெற்றது


கிழக்கு பிராந்திய சத்திய சாயி நிறுவன  தலைவர் ஸ்ரீ எஸ் .கே .வீரபாகு தலைமையில் “ ஒரே நோக்குடனான கனவு ,அதற்கான திட்டமிடல் மூலம் உயரிய வாழ்க்கை “ எனும் தொனிப்பொருளில் சத்திய சாயி பக்த இளைஞர் யுவதிகளுக்கான  தலைமைத்துவம் தொடர்பான  ஒரு நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பு தாமைரைக்கேணியில் உள்ள சத்திய சாயி நிலையத்தில்  இன்று நடைபெற்றது .

இந்த பயிற்சி நெறியில் வளவாளராக இங்கிலாந்து சௌத்தாம்டன் பல்கலைக்கழக பேராசிரியரும் , சத்திய சாயி உயர் கல்வி நிறுவன பகுதிநேர விரிவுரையாளருமான ஸ்ரீ கத்தையா வளவாளராக கலந்துகொண்டு விவுரைகளை வழங்கினார் .

கிழக்கு பிராந்திய சத்திய சாயி நிறுவன அனுசரணையில் இளைஞர் யுவதிகளுக்கு நடைபெற்ற பயிற்சி நெறியை தொடர்ந்து சத்திய சாயி பஜனையும் விசேட தீபாராதனை வழிபாடு நடைபெற்றதுடன் நிகழ்வில் இங்கிலாந்து சௌத்தாம்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து வருகை தந்த பேராசிரியருக்கு மட்டக்களப்பு தாமைரைக்கேணி சத்திய சாயி நிலையத்தினால் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்