மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏப்ரல் 04ஆம் திகதி முதல் உள்ளுராட்சிசபைகள் கூடும்

மட்;டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிசபைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமர்வுகளை ஆரம்பிப்பதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரல் நான்காம் திகதி முதல் சபையாக மண்முனை தென் மேற்கு(பட்டிப்பளை)பிரதேசசபை ஒன்றுகூடுவதாக தெரிவித்த அவர் ஏனைய சபைகளின் திகதிகளையும் அறிவித்தார்.

ஐந்தாம் திகதி போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைகளும் ஆறாம் திகதி மண்முனை மேற்கு பிரதேசசபை மற்றும் மண்முனைப்பற்று பிரதேசசபையும அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் 09ஆம் திகதி மட்டக்களப்பு மாநகரசபையும் ஏறாவூர் நகரசபையும் 10ஆம் திகதி ஏறாவூர்பற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசபையும் ஆட்சியமைக்கப்படவுள்ளதாகவும் கருணாகரம் தெரிவித்தார்.

அதேபோன்று 11ஆம் திகதி கோறளைப்பற்று மத்தியும் வாகரை பிரதேசசபையும் ஆட்சியமைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.