(லியோன்)
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா
வித்தியாலய 2018 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர்
திறனாய்வு விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பிற்பகல் பாடசாலை
மைதானத்தில் அதிபர்
கே .ஸ்ரீதரன் .தலைமையில் இடம்பெற்றது .
விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் என்
.வில்வரத்னம், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , விசேட விருந்தினர்களாக ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம் .பாலசுப்பிரமணியம் , பாடசாலை மேம்பாட்டுத்திட்ட
வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) டி
.யுவராஜன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்,
அதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது .
இதனை
தொடர்ந்து மாணவர்களின் அணிநடை
நிகழ்வுகளுடன் விளையாட்டு நிகழ்வுகள்
ஆரம்பமானது
விளையாட்டு நிகழ்வுகளில் சிறுவர்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும்
பாடசாலை மாணவர்கள் , பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரின் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,
இறுதி நிகழ்வாக 2018ஆம் ஆண்டுக்கான பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும்,வெற்றி கிண்ணங்களும்
வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.