(லியோன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜன மகளிர் கல்லூரியின்
வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி (30) மாலை மட்டக்களப்பு இந்து கல்லூரி
மைதானத்தில் பாடசாலை அதிபர் கே .அருமைராஜா
தலைமையில் இடம்பெற்றது.
விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம
விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் மற்றும் அதிதிகளாக வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப்பணிப்பாளர் ஹைதரலி ,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே
.அருள்பிரகாசம் , ஒய்வு நிலை கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ .சுகுமார், சட்டத்தரணி சுலோஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மாலை
அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,
அதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும்
இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவர்களின்
இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர்
ஏற்றப்பட்டு, இல்ல மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுடன் விளையாட்டுக்கள் ஆரம்பமானது,
விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி , குண்டெறிதல் , மாணவர்களின் தேக
பயிற்சி, வினோத உடை போட்டி, மற்றும் பழைய
மாணவிகள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும்
இடம்பெற்றது,
பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றி
பெற்ற இல்ல மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு பெற்றது.