மட்;டக்களப்பில் மாடு களவாடியவர்கள் சிக்கினர் –மண்கடத்தலும் முறியடிப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமானமுறையில் மண் ஏற்றிச்சென்ற கன்டர் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பில் ஆடுகளை கொள்ளையிட்டுச்சென்றவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏறாவுர் ஐயங்கேணியில் ஆடுகள் கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து இரண்டு ஆடுகள் மீட்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக இவர்கள் ஆடுகள் கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் இது தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஒருவர் தேடப்பட்டுவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் வவுணதீவு பகுதியில் இருந்து சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மண் கன்டர் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.