மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி கருத்தங்கு

 (லியோன்)

மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்தினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு பிணக்குகளை சிறப்பாக கையாளுதல் தொடர்பாகவும் ,மத்தியஸ்த சபை தொடர்பான சட்ட விளக்கங்கள் பற்றியதுமான இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கு 09 ,10 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெறுகின்றது .
  

மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகம் மற்றும் நியு அரோ  பெண்கள் வலையமைப்பு இணைந்து  நடத்தப்பட்ட மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கின் முதல் நாள் கருத்தரங்கு   நிகழ்வினை சிரேஷ்ட சட்டத்தரணி டி சி .சின்னையா ஆரம்பித்து வைத்தார் .

இதில் வளவாலர்களாக  உளநல மருத்துவ நிபுணர் ஜே நௌபர் , சட்டத்தரணி கே .யோகேஸ்வரன் ஆகியோர்  கலந்துகொண்டார்


இந்த பயிற்சி கருத்தரங்கில் மண்முனை வடக்கு ,செங்கலடி ,ஆரையம்பதி ,வவுணதீவு ,காத்தான்குடி ,ஏறாவூர் ,பட்டிப்பளை ,ஆகிய பிரதேச மத்தியஸ்த உறுப்பினர்கள் , மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலக உத்தியோகத்தர்கள்  மற்றும் நியு அரோ  பெண்கள் வலையமைபின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்