பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

 
(லியோன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பாடசாலைகளின் கல்வி பயிலும் திவா கட்டிட நிர்மான ஊழியர்களின் 2018 ஆண்டு பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திவா கட்டிட நிர்மான அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது .
.

திவா கட்டிட நிர்மான  நிறுவகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றது ,இதற்கு அமைய   நிறுவகத்தில் தொழில் புரியும் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வியினை மேம்படுத்தும் நோக்குடன்  பிள்ளைகளுக்கு  பாடசாலை கற்றல் உபகரணங்கள்  வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிதிகளாக  மட்டக்களப்பு கரித்தார் எகெட் நிறுவக இயக்குனர் எலக்ஸ் ரொபட் , மாநகர சபை பிரதம கணக்காளர் ஜோன் பிள்ளை , மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஆர் எம் .எஸ்  ஐ . ராஜபக்ச , நிறுவன உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்   உட்பட பலர்  கலந்துகொண்டனர்