தற்கொலைக்கு முயற்சித்த இளைஞன் சிகிச்சை பல இன்றி உயிரிழப்பு

(லியோன்)

மட்டக்களப்பு
கல்லடி உப்போடை விபுலானந்த வீதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தூக்கிலிட்ட நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  கல்லடி உப்போடை விபுலானந்த வீதியை சேர்ந்த கணேசமூர்த்தி சாரோஜிதன்  ( வயது 22 ) என்ற இளைஞன் கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள அவரது உறவினர்  வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உறவினர்களினால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்    

குறித்த இளைஞன் கடந்த திகதி 26ஆம் கல்லடி பால ஆற்றில்  விழுந்து தற்கொலை செய்துகொண்ட கல்லடி மாரியம்மன் கோயில் வீதியை  சேர்ந்த கணேசமூர்த்தி  .உமாரமணனனின் சகோதரன் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்     .


குறித்த இளைஞனின்  மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பொலிசாரும்  மற்றும் மட்டக்களப்பு காத்தான்குடி  பொலிசாரும்  மேற்கொண்டு வருகின்றனர்