மட்டக்களப்பில் முனைப்பினால் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள் வழங்கி வைக்கப்பு

மட்டக்களப்பில் முனைப்பினால் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு  மாவடீவேம்பில் அமைந்துள்ள ஏறாவூர் பற்று ஏர்முனை மாற்றுத்திறனாளிகளின் அமைப்பின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் கே.கங்காதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முனைப்பின் சிறிலங்கா நிறுவனத்தலைவர் மா.சசிகுமார்,மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஆலோசகர் அரியதாஸ், முனைப்பின் சுவிஸ் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மகாகணத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஏர்முனை மாற்றுத்திறனாளிகளின் அமைப்பினர் முனைப்பு நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து முதற்கட்டமாக ஒரு தொகுதியினருக்கு நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.