மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் பொங்கல் விழா நாளை 2018.01.19 வெள்ளிக்கிழமை வவுணதீவு நாவற்காடு கிராம பாடசாலை சந்தியில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தன் பிரதம விருந்தினராக பங்குபற்றவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பொங்கல் விழாவில் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெறவுள்ளது.