மகிளூரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி காரியாலய திறப்புவிழாவும் பிரச்சார கூட்டமும்.


மகிளூர் பெரும் பிரதேச 8ம் வட்டாரத்துக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி காரியாலய திறப்புவிழாவும் பிரசார கூட்டமும் அண்மையில் நடைபெற்றது.

காரியாலய திறப்பு விழாவைத்தொடர்ந்து மகிளூர் பெரும் பிரதேச 8ம் வட்டார வேட்பாளரான கணபதிப்பிள்ளை உத்தமனை ஆதரித்து பிரச்சார கூட்டமும் நடைபெற்றுள்ளது.

மகிளூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னால் விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,  சா.வியாழேந்திரன் , சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னால் மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா. நடராசா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.