மாமாங்கம் பாலையூற்று நாகவதனி அம்பாள் ஆலய பால்குட பவனி

(லியோன்)

மாமாங்கம் பாலையூற்று நாகவதனி அம்பாள் ஆலய இரண்டு வருட நிறைவினை முன்னிட்டு பால்குட பவனியும் விசேட தீபாராதனைகளும் இடம்பெற்றது .


மட்டக்களப்பு நகரில் மாமாங்கத்தில்  பிரசித்திபெற்று விழங்கும்  மாமாங்கம் பாலையூற்று நாகவதனி அம்பாள் சிற்றாலயத்தின் இரண்டு வருட நிறைவினை முன்னிட்டு மாபெரும் பால்குட பவனியும் விசேட தீபாராதனை பூஜைகளும் இன்று சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அடியார்கள் கொண்டுவந்த  பால் மூலமூர்த்தியாகிய  நாகவதனி அம்பாளுக்கு அபிசேகம் செய்யப்பட்டது. 

தொடர்ந்து விசேட  தீபாராதனை பூஜைகள் இடம்பெற்றது   .
இந்த பெருவிழாவில்  பெருமளவான அடியார்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்