(லியோன்)
வாழ்வோசை செவிபுலனற்றோர் பாடசாலை மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் , நன்கொடையாளர்கள்
கௌரவிப்பும் இன்று மட்டக்களப்பில்
நடைபெற்றது .
மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ சங்கத்தின் ஏற்பாட்டில் வாழ்வோசை செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் , நன்கொடையாளர்கள்
கௌரவிப்பும் நிகழ்வும் மட்டக்களப்பு வாலிப
கிறிஸ்தவ சங்க மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது .
மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ
சங்க தலைவர் இ .வி . தர்ஷன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம்
.உதயகுமார் , சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் பிரகாஷ் , வாலிப கிறிஸ்தவ சங்க பொதுச்செயலாளர் ஜெகன்
ஜீவராஜ் மற்றும் வாழ்வோசை செவிப்புலனற்றோர் பாடசாலைக்கு நிதி வழங்கும் நிறுவன
நன்கொடையாளர்கள் கலந்துகொண்டனர் .
நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியிலும் ,மாவட்ட ரீதியிலும் செவிப்புலனற்ற
மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சித்தரம் . நாடகம் ,நாட்டியம் போன்ற போட்டிகளில்
பங்குபற்றி வெற்றிபெற்ற வாழ்வோசை செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களும் மற்றும் ,வெற்றி கிண்ணங்களும் அதிதிகளினால்
வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நன்கொடையாளர்கள் ,வாழ்வோசை செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள் ,வாழ்வோசை பாடசாலை ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் . வாலிப கிறிஸ்தவ சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்