வாழ்வோசை செவிபுலனற்றோர் பாடசாலை மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

(லியோன்)

வாழ்வோசை செவிபுலனற்றோர்  பாடசாலை மாணவர்களுக்கான  விருது வழங்கும் நிகழ்வும் , நன்கொடையாளர்கள் கௌரவிப்பும்  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ சங்கத்தின் ஏற்பாட்டில்  வாழ்வோசை செவிப்புலனற்றோர்  பாடசாலை மாணவர்களுக்கான  விருது வழங்கும் நிகழ்வும் , நன்கொடையாளர்கள் கௌரவிப்பும்  நிகழ்வும்  மட்டக்களப்பு வாலிப  கிறிஸ்தவ சங்க மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது .

மட்டக்களப்பு வாலிப  கிறிஸ்தவ சங்க தலைவர்  இ .வி . தர்ஷன் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன  திணைக்கள பொறியியலாளர் பிரகாஷ் , வாலிப  கிறிஸ்தவ சங்க பொதுச்செயலாளர் ஜெகன் ஜீவராஜ்  மற்றும் வாழ்வோசை  செவிப்புலனற்றோர் பாடசாலைக்கு  நிதி வழங்கும் நிறுவன நன்கொடையாளர்கள் கலந்துகொண்டனர் .

நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியிலும் ,மாவட்ட ரீதியிலும் செவிப்புலனற்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சித்தரம் . நாடகம் ,நாட்டியம் போன்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற  வாழ்வோசை செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களுக்கு  சான்றிதழ்களும் மற்றும் ,வெற்றி கிண்ணங்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நன்கொடையாளர்கள் ,வாழ்வோசை  செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள் ,வாழ்வோசை பாடசாலை ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் . வாலிப  கிறிஸ்தவ சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்