கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


சிறைச்சாலைகள் ஐக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  சிறைச்சாலை கைதிகளின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு  சிறைச்சாலையில் நடைபெற்றது

மட்டக்களப்பு  சிறைச்சாலை   பிரதம  ஜெயிலர்  என் .பிரபாகரன் ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர்  தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது 


இந்நிகழ்வில்  .சிறைச்சாலைகள் ஐக்கிய ஒன்றிய பிராந்திய தலைவர் எஸ் .தயாசீலன் , சிறைச்சாலைகள் ஐக்கிய தேசிய இயக்குனர் டி ஜெயராஜ் ,மட்டக்களப்பு சிறைச்சாலை  பிரதம புனர்வாழ்வு உத்தியோகத்தர் விக்கிரம சிங்க , சிறைச்சாலை நலன்புரி  உத்தியோகத்தர்கள் சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்   கலந்துகொண்டனர் .