கருவபங்கேணி பகுதியில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணி

 (லியோன்)

டெங்கு ஒழிப்பு சிரமதான பணி 
இன்று மட்டக்களப்பு கருவபங்கேணி  பகுதியில் முன்னெடுக்கப்பட்டது .


டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கிராம சேவை பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு  சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய மட்டக்களப்பு கருவபங்கேணி புனித வனத்து அந்தோனியார்   ஆலய வளாகம் மற்றும்  அதனை அண்டிய பகுதிகளில் துப்பரவு  செய்யும் மாபெரும் சிரமதான பணி   இன்று முன்னெடுக்கப்பட்டன  


ஆலய பங்கு தந்தை அருட்பணி பிறைனர் செல்லர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிரமதான பணியில்  ஆலய பங்கு மக்கள் , ஜெயந்திபுரம் பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள்  , ஆலய பரிபாலன சபையினர் என பலர் கலந்துகொண்டனர் .