(லியோன்)
மட்டக்களப்பு பாலமீன்மடு – திராய்மடு மீனவ கூட்டுறவு சங்கத்தின்
ஏற்பாட்டில் மீனவர்களுக்கான சிற்றுண்டிசாலை மற்றும் விற்பனை நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மாவட்டத்தில் பல வாழ்வாதார நிதி உதவி திட்டங்களை
முன்னெடுத்து வருகின்றது . இதனுடன்
இணைந்ததாக மட்டக்களப்பு மீனவர்களின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்கி வருகின்றது
இதன் கீழ் மாவட்ட செயலகத்தின் நிதி உதவியின் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு பாலமீன்மடு
– திராய்மடு மீனவ கூட்டுறவு சங்க மீனவர்களுக்கான சிற்றுண்டிசாலை மற்றும் விற்பனை
நிலையம்
பாலமீன்மடு இறங்குதுறை பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது .
மாவட்ட அரசாங்க அதிர் எம் .உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு
திறந்து வைத்தார் .
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாலே ஆர் . நெடுஞ்செழியன் ,
மாவட்ட பொறியியலாளர் டி ,சுமன் மற்றும் பாலமீன்மடு – திராய்மடு மீனவ கூட்டுறவு
சங்க தலைவர் ,செயலாளர் உட்பட பாலமீன்மடு – திராய்மடு மீனவ கூட்டுறவு சங்க
உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்