மீனவர்களுக்கான விற்பனை நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது

(லியோன்)



மட்டக்களப்பு பாலமீன்மடு – திராய்மடு மீனவ கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் மீனவர்களுக்கான சிற்றுண்டிசாலை மற்றும் விற்பனை நிலையம்  மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மாவட்டத்தில்  பல வாழ்வாதார நிதி உதவி திட்டங்களை  முன்னெடுத்து  வருகின்றது . இதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு மீனவர்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ்  நிதி உதவிகள் வழங்கி வருகின்றது 

இதன் கீழ் மாவட்ட செயலகத்தின் நிதி உதவியின் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு பாலமீன்மடு – திராய்மடு மீனவ கூட்டுறவு சங்க மீனவர்களுக்கான சிற்றுண்டிசாலை மற்றும் விற்பனை நிலையம் பாலமீன்மடு இறங்குதுறை பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது .

மாவட்ட அரசாங்க அதிர் எம் .உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார் .


இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாலே ஆர் . நெடுஞ்செழியன் , மாவட்ட பொறியியலாளர் டி ,சுமன் மற்றும் பாலமீன்மடு – திராய்மடு மீனவ கூட்டுறவு சங்க தலைவர் ,செயலாளர் உட்பட பாலமீன்மடு – திராய்மடு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்