(சசி துறையூர்)
மண்முனை மேற்கு பிரதேச செயலக பொங்கல் விழா வெகு விமர்சையாக
பிரதேச செயலாளரின் தலைமையில் 23.01.2018 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பிரதேச கலாச்சார உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வவுணதீவு பிரதேச சமூக மட்ட அமைப்புக்களான ஆலயங்கள், கிராம அபிவிருத்திச்சங்கங்கள், கலாமன்றங்கள், இளைஞர்கழகங்கள், மகளீர் அமைப்புக்கள், முதியோர் சங்கங்கள் இம் முறை பொங்கல் விழாவை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
சுபநேரத்தில் குரவை ஒலியுடன் மங்கல வாத்தியங்கள் முழங்க பொங்கல் பானையில் பிரதேச செயலாளரினால் அரிசு இடப்பட்டு கும்பி பாடல்களும் இசைக்கப்பட்டு பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து கயிறுழுத்தல், யானைக்கு கண்வைத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களும் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மண்முனை மேற்கு பிரதேச செயலக பொங்கல் விழா வெகு விமர்சையாக
பிரதேச செயலாளரின் தலைமையில் 23.01.2018 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பிரதேச கலாச்சார உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வவுணதீவு பிரதேச சமூக மட்ட அமைப்புக்களான ஆலயங்கள், கிராம அபிவிருத்திச்சங்கங்கள், கலாமன்றங்கள், இளைஞர்கழகங்கள், மகளீர் அமைப்புக்கள், முதியோர் சங்கங்கள் இம் முறை பொங்கல் விழாவை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
சுபநேரத்தில் குரவை ஒலியுடன் மங்கல வாத்தியங்கள் முழங்க பொங்கல் பானையில் பிரதேச செயலாளரினால் அரிசு இடப்பட்டு கும்பி பாடல்களும் இசைக்கப்பட்டு பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து கயிறுழுத்தல், யானைக்கு கண்வைத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களும் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.