கல்லடி பாலத்தில் பரபரப்பு- பொறியியலாளர் குதித்தாக வதந்தி

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து பொறியியலாளர் ஒருவர் குதித்தாக வெளியான தகவல்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு,கல்லடியில் உள்ள இலங்கை மின்சாரசபை தலைமையகத்தில் உயர் பதவி வகிக்கும் பொறியியலாளர் ஒருவரை காணவில்லையென காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்ததாக வெளியான உறுதிப்படுத்தப்படாத தகவல்களையடுத்து பெருமளவான மக்கள் கல்லடி பாலத்தில் குவிந்துள்ளதை காணமுடிந்தது.

எனினும் வீட்டில் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுமாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு குறித்த பொறியியலாளர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கல்லடி பாலத்தில் இருந்து யாரும் குதித்தாக தெரிவிப்பது தொடர்பில் வாந்திகளே பரவிவருதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றுமு; மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.