கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

(லியோன்)


 மட்டக்களப்பு கல்வி வயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு  கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் 2017 ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு வித்தியாலய அதிபர் டி அருமைநாயகம் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது .


நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் 2017 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பரிசில்களும் . சான்றிதழ்களும் வழங்கி  கௌரவிக்கப்பட்டனர் ,

இதேவேளை பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சைகளில் சிறந்த புல்லைகலஐம் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன .


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .சுதர்ஷினி ஸ்ரீகாந்த் , மட்டக்களப்பு கல்வி வலய அலுவலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ் எம் . ஹைதரலி , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே .அருள்பிரகாசம் ,ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் மற்றும் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் , மதத்தலைவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பெற்றோர்கள் , மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்