வெளிநாட்டு புலமைப்பரிசில் தெரிவுக்கான நேர்முகத்தேர்வு.

(சசிதுறையூர்)
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கு இளைஞர் யுவதிகளை தெரிவு செய்வதற்கான  நேர்முகத்தேர்வு கடந்த  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நேர்முகத்தேர்வில் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் பல  இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்முகத்தேர்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள், நிஸ்கோ கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளர், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உபதலைவர்   ஆகியோர் தேர்வாளர்களாக கலந்துகொண்டனர்.

இம்முறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து எட்டுப்பேர் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.