வேட்பாளர்களுக்கான மார்ச் 12 அமைப்பின் தூய அரசியல் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தூய அரசியலை ஏற்படுத்தும் வகையில் மார்ச் 12 அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கருத்தாடல் நிகழ்வு நாளை 01ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மார்ச்-12 இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த கருத்தாடல் நிகழ்வு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை அரசியல் கலாசாரத்தின் ஆக்கபூர்வமான மாற்றத்திற்காக பணியாற்றி வரும் மார்;ச் 12 இயக்கத்தின் மாசற்ற பிரஜைகளின் செயற்பாட்டு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் சிவில் சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டுவருகின்றது.

இதன் தொடர்ச்சியான செயற்பாடுகள் கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கடந்த வருடம் மார்ச் மாதம் நடாத்தப்பட்;டது.

இதன்கீழ் அனைத்து கட்சியினையும் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களையும் ஒரு இடத்தில் ஒன்று திரட்டி தூய அரசியலில் அவர்கள் கொண்டுள்ள பற்றுறுதியை வெளிப்படுத்தும் வகையில்இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக மார்ச் -12 இயக்கத்தின் ஏற்பாட்டுக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ச.சிவயோகநாதன் தெரிவித்தார்.