பங்குதந்தை அருட்பணி ரமேஷ் கிறிஸ்டி அடிகளாரை வரவேற்கும் நிகழ்வு

(லியோன்)

பாடசாலை மாணவர்களினால்  பங்குதந்தை அருட்பணி ரமேஷ் கிறிஸ்டி அடிகளாரை வரவேற்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு தாண்டவன்வெளி பங்கில் நடைபெற்றது .
  

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய பங்கு தந்தையாக 2018 ஆண்டு முதல் எதிர் வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஆலய பங்கு  பணிமனை பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ள அருட்பணி ரமேஷ் கிறிஸ்டி அடிகளாரை வரவேற்கும் விசேட நிகழ்வும் பங்கு பாடசாலை மாணவர்களுக்கான விசேட திருப்பலியும் இன்று இடம்பெற்றது


.பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற திருப்பலியினை மாணவர்களுக்காக ஒப்புகொடுக்கப்பட்டதுடன் , திருப்பலியில்  மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய பங்கு பாடசாலை  மாணவர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்