மெர்கண்டைல் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் வருடாந்த ஒன்று கூடல் ( Video & Photos)

(லியோன்)

மெர்கண்டைல்  பாதுகாப்பு சேவை  நிறுவனத்தின்  வருட நிறைவு நிகழ்வும் நிறுவன பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும்   மட்டக்களப்பில் நடைபெற்றது .


1970 ஆம் ஆண்டு  தந்தை அம்பலவாணரினால்  யாழ்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மெர்கண்டைல் தனியார் பாதுகாப்பு சேவை யானது தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில்  ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து  தெற்கிலும் பாதுகாப்பு சேவையினை விஸ்தரிக்கப்பட்டு  தனியார்  பாதுகாப்பு சேவைகளை   வழங்கி வருகின்றது

இந்த மெர்கண்டைல் நிறுவனத்தின்    47  வது வருட நிறைவு நிகழ்வும் நிறுவனத்தின் பாதுகாப்பு சேவையினை  மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கி வரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும்    மட்டக்களப்பில் நடைபெற்றது .

மெர்கண்டைல் தனியார் பாதுகாப்பு சேவையின் மட்டக்களப்பு  மாவட்ட பொறுப்பதிகாரி ஜெயசந்திரன் ஒழுங்கமைப்பில்  நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர்  வி .சுகுமாரன் தலைமையில் மட்டக்களப்பு சின்ன உப்போடை பேகர் கலாசார மண்டபத்தில் இன்று  நடைபெற்றது .

நிகழ்வில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது.

இதேவேளை  மெர்கண்டைல் நிறுவனத்தினால்  2017 ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் நடத்தப்பட்ட  விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும்  நிறுவனத்தின்   பணிப்பாளரினால்  பரிசில்கள் வழங்கப்பட்டது .

இரண்டு நாட்கள் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் ஆர் .ராயப்பு ,மட்டக்களப்பு மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.சசிகரன் ,மட்டக்களப்பு யூனியன் வங்கி முகாமையாளர் கே . கோபிநாத் ,யூனியன் வங்கி உத்தியோகத்தர் ,வை . யுவேந்திரன் ,மட்டக்களப்பு - கல்முனை நேஷன் லங்கா திட்ட முகாமையாளர் , கே .ஸ்ரீகாந்த், கல்முனை நேஷன் லங்கா   கே கிருஸ்னகாந்த் , வவுணதீவு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் என் .ஜெயசுதன் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .
  .