கல்லடி பகுதியில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை

மட்டக்களப்பு  கல்லடி பகுதி வீடு ஒன்றில் இருந்து பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம்  கொள்ளையிடப்பட்டுள்ளதாக  காத்தான்குடி  பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்லடி – கல்முனை பிரதான வீதியின் கல்லடி நொச்சிமுனை  பகுதி வீடு ஒன்றில் இருந்து  நேற்று வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்புற கதவினை உடைத்து  பெறுமதியான தங்க நகைகள் ,மற்றும் பணம்  கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த  சம்பவத்தின் போது   வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில்   வீட்டின் பின்புற கதவினை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள்  வீட்டின்  அறையில் இருந்த நகைகளை கொள்ளையிட்டப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதன்போது சுமார் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான ஷஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் மூன்றரை இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளுது.

குறித்த சம்பவ இடம்பெற்ற இடத்திற்கு  சென்ற காத்தான்குடி  பொலிசார்   மற்றும் குற்றத்தடவியல் பிரிவு பொலிஸ் குழுவினர்  இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.