மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்து இதுவரைகாலமும் எந்தவித தொழிலுமின்றி உள்ள வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் (20.01.2018) சனிக்கிழமை மட்டக்களப்பில் உள்ள YMCA மண்டபத்தில் (மட்டக்களப்பு தாண்டவன்வெளி தேவாலயத்தின் பின்னால்) இடம்பெற உள்ளது. குறிப்பாக காலை 8 மணிக்கு விஷேட ஒன்றுகூடலும், பட்டதாரிகளை பதிவு செய்தலும் இடம்பெறும்.
அத்தோடு இங்கு பெறப்படும் தகவல்கள் மாவட்டச் செயலகம், மற்றும் ஜனாதிபதி போன்றோரிடம் கையளிக்கப்படவேண்டி உள்ளமையால் புதிதாக பட்டம் முடித்த பட்டதாரிகள் உட்பட மட்டக்களப்பிலுள்ள அனைத்துப் பட்டதாரிகளும் வருகை தரவும்.
மேலதிக தகவல்களுக்கு:
வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்
:- 0752150611.