அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலைக்கு சிறார்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

(லியோன்)

தேசிய  ரீதியில்   முதலாம் தரத்திற்கு மாணவர்களை  இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள்  நாடளாவிய ரீதியில்  நடைபெற்று வருகின்றது .


இதற்கு அமைய  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  அனைத்து பாடசாலைகளுக்கு   மாணவர்களை இணைத்துக்கொள்ளும்  நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன .

இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தின்   மட்டக்களப்பு  அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலைக்கு சிறார்களை  இணைத்துக்கொள்ளும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி ஞானராஜன் ஜெயராஜினி தலைமையில் இன்று  நடைபெற்றது  .

நிகழ்வில் புதிய  சிறார்களை  மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் சிறார்களின்   வரவேற்பு கலை நிகழ்வுகளும்    இடம்பெற்றது  .


இந்நிகழ்வில் மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் வி குகதாசன் , அமிர்தகழி மெதடிஸ்த ஆலய  அருட்பணி கிரேஸ் ரொபின் ரொபின் , அமிர்தகழி மெதடிஸ்த ஆலய  பெண்கள் சங்க செயலாளர் செல்வி .எஸ் ..வசந்தா,  அமிர்தகழி மெதடிஸ்த ஆலய  நிர்வாக சபை உறுப்பினர்  டி ராஜேந்திரம் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .