(லியோன்)
தேசிய ரீதியில் முதலாம்
தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள்
நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது .
இதற்கு அமைய மட்டக்களப்பு
மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் இடம்பெற்று
வருகின்றன .
இதன் கீழ்
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தின் மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலைக்கு சிறார்களை
இணைத்துக்கொள்ளும் நிகழ்வு பாடசாலை அதிபர்
திருமதி ஞானராஜன் ஜெயராஜினி தலைமையில் இன்று நடைபெற்றது .
நிகழ்வில் புதிய சிறார்களை மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் சிறார்களின் வரவேற்பு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மாவட்ட
செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் வி குகதாசன் , அமிர்தகழி மெதடிஸ்த ஆலய அருட்பணி கிரேஸ் ரொபின் ரொபின் , அமிர்தகழி மெதடிஸ்த ஆலய பெண்கள் சங்க செயலாளர் செல்வி .எஸ் ..வசந்தா, அமிர்தகழி மெதடிஸ்த
ஆலய நிர்வாக சபை உறுப்பினர் டி ராஜேந்திரம் மற்றும் பாடசாலை
ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .