அரசடியில் விபத்து –தாயும் மகளும் படுகாயம்

மட்டக்களப்பு நகரில் அரசடி சந்திக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர்.

அரசடிச்சந்திக்கு அருகில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் இருந்து தனது பிள்ளையினைக்கூட்டிக்குnகொண்டு சென்ற தாய் மற்றும் மகள் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதன்போது தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மகள் மிகவும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ள பொலிஸார் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞனையும் கைதுசெய்துள்ளனர்.

குறித்த விபத்து காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.