மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

(சசி துறையூர்) 2018ம் வருடத்தின் முதல் நாள் இன்று திங்கட்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட அரசடித்தீவு சக்தி மகளிர் இல்ல மாணவர்களுக்கு  மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்  வழங்கிவைக்கப்பட்டது.

 காலம்சென்ற மண்முனை வடக்கு பிரதேச முன்னால் இளைஞர் சேவை உத்தியோகஷ்தர் திருமதி பிரசாந்தி பிரியதர்ஷன் அவர்களின் நினைவாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த  நிகழ்வில் மாவட்ட சம்மேளன தலைவர் ச.திவ்வியநாதன், தேசிய சம்மேளன பிரதிநிதிகளான ரி.விமல்ராஷ், ந.திவாகர், மாவட்ட சம்மேளன நிருவாக செயற்பாட்டாளர்களான ரி.பயஸ்ராஸ், செல்வி எஸ்.சிஜானி, ச. பிரியங்கன்
ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.