காத்தான்குடியில் 35கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மட்டக்களப்ப மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை முச்சக்கர வண்டியில் கஞ்சா கடத்த முற்பட்டபோதே இந்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதி கஸ்தூரி ஆராய்ச்சி தெரிவித்தார்.

குறித்த முச்சக்கர வண்டியில் இருந்து சுமார் 20இலட்சம் ரூபா பெறுமதியான 35 கிலோ கஞ்சா துகள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த கஞ்சா மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் வகையில் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.