(லியோன்)
சர்வதேச மனித உரிமைத் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மனித உரிமை தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எ .சி . எ . அசிஸ் தலைமையில் நடைபெற்றது
.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்
கே.குணநாதன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார் .
இந்நிகழ்வுக்கு விசேட கருத்துரைகளை வழங்க வளவாளர்களாக வின்ஸ் ஒப் விமன் பெண்கள் நிறுவனத்தின்
பணிப்பாளர் திருமதி பாவுமியா சரீப் , கேமிட் நிறுவன பிரதிநிதி கலைச்செல்வன் மற்றும் நிகழ்வில் சிறைச்சாலை
உத்தியோகத்தர்கள் , சட்டத்தரணிகள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் , சமுர்த்தி
உத்தியோகத்தர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,அரச திணைகள் உத்தியோகாத்தர்கள்
, பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்