தேற்றாத்தீவில் வாகன விபத்து வயோதிப பெண் பரிதாபமாக பலி

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீதியை  கடக்க முற்பட்ட வயோதிப பெண்ணான கு.பூபதி (வயது 70)  கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த பெண் படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சை பலன்னின்றி பலியானார்.

சம்பவம் தொடர்பாக மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டதுடன்  இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.