(லியோன்)
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்களின் முதலாம்
தரத்திற்கு செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் காரியாலயத்தில் நடைபெற்றது .
பொலிஸ்மா அதிபர்
பூஜித்த ஜெயசுந்தரவின் சிந்தனைக்கு அமைவாக பொலிஸ் குடும்ப நல சங்கம் , .பொலிஸ் சேவை
பெண்கள் பிரிவு மற்றும் பொலிஸ் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நாடெங்கிலும் உள்ள பொலிஸ் திணைக்கள பொலிஸ்
உத்தியோகத்தர்களின் 2018
ஆம்
ஆண்டு முதலாம் தரத்திற்கு செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல்
உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (16) நடைபெற்றது .
இதற்கு அமைய மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பொலிஸ்
நிலையங்களில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் முதலாம் தரத்திற்கு பாடசாலை
செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி தீகா வதுற தலைமையில் நடைபெற்றது
.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர்
ஜாகொட ஆராச்சி ,மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் சமன் யடவர ,, மட்டக்களப்பு 12 பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும்
சிறார்கள் கலந்துகொண்டனர்