பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்களின் முதலாம் தரத்திற்கு செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில்   நடைபெற்றது .


பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் சிந்தனைக்கு அமைவாக பொலிஸ் குடும்ப நல சங்கம் , .பொலிஸ் சேவை பெண்கள் பிரிவு மற்றும் பொலிஸ் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நாடெங்கிலும் உள்ள பொலிஸ் திணைக்கள பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2018 ஆம்  ஆண்டு முதலாம் தரத்திற்கு செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (16) நடைபெற்றது .

இதற்கு அமைய  மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் முதலாம் தரத்திற்கு பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகா வதுற  தலைமையில் நடைபெற்றது .  

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட  பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஜாகொட ஆராச்சி ,மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர ,, மட்டக்களப்பு 12  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்   பொலிஸ் உத்தியோகத்தர்கள்  மற்றும் சிறார்கள் கலந்துகொண்டனர்