தாண்டவன்வெளி மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு

 (லியோன்)


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை ஆலய பங்கு மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வுகள் பங்குதந்தை அருட்பணி ஏலக்ஸ் ரொபட்  தலைமையில் தாண்டவன்வெளி பேர்டினல் மண்டபத்தில் நடைபெற்றது .


ஆரம்ப நிகழ்வாக மறைக்கல்வி மாணவர்களினால் அதிதிகளுக்கு மலர்மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டன.

இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றளுடன் மறைக்கல்வி மாணவர்களின்  ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது .

நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ,மாணவர்களுக்கு பரிசில்களும் ,சான்றிதழ்களும் , வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்


இந்நிகழ்வில் அருட்பணி ஜேசுதாசன்   மறை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .