தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வரதராஜப்பெருமாள் உட்பட ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டு விடுதலை –மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு நகரில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் இன்று தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தாம் பொலிஸாரின் கைதுசெய்யப்பட்டபோது தாங்கள் கைதுசெய்யப்பட்டதாக வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

தேர்தல்pல் மட்டக்களப்பு மாநகரசபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் தேர் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வேட்பாளர்களின் அறிமுக துண்டுப்பிரசும் விநியோகம் செய்தபோதே தாங்கள் பொலிஸாரினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவித்தாட்சி அதிகாரியுமான மா.உதயகுமார்,மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுசீலன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து தாங்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு முறையான அறிவுறுத்தல்களை தேர்தல்கள் திணைக்களம் வழங்கவேண்டும் என வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

மாதிரி வாக்கு சீட்டுதான் விநியோகிக்கமுடியாது.வேட்பாளர்கள் கட்சியின் சின்னத்தினை கொண்ட துண்டுப்பிரசுரங்களை வெளியிடமுடியும் என்பதை தெரியாதவர்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.