கிழக்கிற்கு ஒளித்த விளக்குகள் நூல் வெளியீட்டு விழா

 (லியோன்)

கிழக்கிற்கு   ஒளித்த விளக்குகள் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது . 


மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் 203 வது ஆண்டு நிறைவு நிகழ்வாக கே .ஜி . அருளானந்தம் எழுதிய கிழக்கிறகு   ஒளித்த விளக்குகள் எனும் நூல் வெளியீட்டு விழா நிகழ்வு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபை சேகர முகாமைக்குரு  அருட்திரு ஜே . டப்ளியு . யோகராஜா  தலைமையில் மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை , கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மான்ரேசா தியான இல்லம் அருட்தந்தை ஜோசெப் மேரி , சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி கிரேஸ்  நவரட்னராஜா , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சௌக்கியவிஞ்ஞான பீட வைத்திய நிபுணர் வைத்தியர் கே .டி .சுந்தரேசன் ,கிழக்கு பல்கலைக்கழக இராசாயனவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் எ. யோகேஸ்வரன் கலந்துகொண்டனர் .

மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் 203 வது ஆண்டு நிறைவு நிகழ்வாக  நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் கவிஞர்கள் ,எழுத்தாளர்கள் , கல்வி திணைக்கள அதிகாரிகள் . புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின்  உறுப்பினர்கள்  ,ஆய்வாளர்கள் , சமூக பிரதிநிதிகள் , சமையத்தலைவர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்