(லியோன்)
கிழக்கிற்கு ஒளித்த
விளக்குகள் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் 203 வது
ஆண்டு நிறைவு நிகழ்வாக கே .ஜி . அருளானந்தம் எழுதிய கிழக்கிறகு ஒளித்த விளக்குகள் எனும் நூல் வெளியீட்டு விழா நிகழ்வு புளியந்தீவு
மெதடிஸ்த திருச்சபை சேகர முகாமைக்குரு
அருட்திரு ஜே . டப்ளியு . யோகராஜா
தலைமையில் மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப்
பொன்னையா ஆண்டகை , கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மான்ரேசா தியான இல்லம் அருட்தந்தை
ஜோசெப் மேரி , சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி
வைத்தியர் திருமதி கிரேஸ் நவரட்னராஜா ,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சௌக்கியவிஞ்ஞான பீட வைத்திய நிபுணர் வைத்தியர் கே
.டி .சுந்தரேசன் ,கிழக்கு பல்கலைக்கழக இராசாயனவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்
வைத்தியர் எ. யோகேஸ்வரன் கலந்துகொண்டனர் .
மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் 203 வது
ஆண்டு நிறைவு நிகழ்வாக நடைபெற்ற
நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் கவிஞர்கள் ,எழுத்தாளர்கள் , கல்வி திணைக்கள
அதிகாரிகள் . புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின்
உறுப்பினர்கள் ,ஆய்வாளர்கள் , சமூக
பிரதிநிதிகள் , சமையத்தலைவர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்