மட்டக்களப்பில் அரசியல் விழிப்புணர்வு நிகழ்வு

மட்டக்களப்பில் அரசியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி,பேர்டினன்ட் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.கே.சுமந்திரன்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.துரைராஜசிங்கம் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மாவை சேனாதிராஜா,சுமந்திரன் ஆகியோர் விளக்கமளித்தனர்.

அத்துடன் எதிர்காலத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் கருத்துகள் வெளியிடப்பட்டதுடன் பொதுமக்களினால் கேட்கப்பட்டகேள்விகளுக்கும் பதில்கள் வழங்கப்பட்டன.