(லியோன்)
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள்
பாடசாலையின் ஆண்டு நிறைவினை
சிறப்பிக்கும் விசேட திருப்பலி மறை மாவட்ட
ஆயரினார் ஒப்புகொடுக்கப்பட்டது
.
மட்டக்களப்பு கல்வி
வலயத்திற்குற்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் 141 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு
மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில்
அருட்தந்தையர்கள் இணைந்து விசேட திருப்பலியினை ஒப்புகொடுத்தனர் .
திருப்பலியினை
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற அன்னை
வெரோனிக்காவின் 150 வது ஆண்டு நிறைவினை
சிறப்பிக்கும் வகையில் தமிழ் , ஆங்கில மொழியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி
பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் கிழக்கு மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட விஞ்ஞான வினா
விடை போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆயரினால் சான்றிதழ்கள்
வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .
பாடசாலையின் ஆண்டு நிறைவினை
சிறப்பிக்கும் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,
அருட்சகோதரிகள் , அருட்தந்தையர்கள் கலந்து சிறப்பித்தனர்